Powered By Blogger

சனி, 8 செப்டம்பர், 2018

பாயும் நதி

அனுதினம் எண்ணம் பின்னால் இழுக்கும் 
தனுவெனும் செயலே வீச்சு.  


ஆயிரம் தடைகள் அணையினை போடும்
பாயும் நதியே உடை. 


இளமைப் புரவி விரைந்திடும் வேகம்
வளமை பெறவே உழை. 


ஈடில்லை எவரும் என்றெண்ணு என்றாலும்
கேடில்லா கருவம் கொள். 


உதைத்தால் அழவா பிறந்தாய் உலகம்
உதைத்தால் அதையே உதை. 


ஊமைக் கனவும் ஒருநாள் கதைக்கும்
சாமைக் கதிராகச் சிரி. 


எரியும் நெருப்பை காற்றே 
பெருக்கும்
கனன்று கனன்று எழு


ஏக்கம் தயக்கம் மனதில்
அகற்று
ஏந்தித் திரிவாய் இலக்கு


ஒடுங்கியே கிடந்தால் ஓய்வும் சலிப்பு
வெடுக்கென எழுவாய் சிறப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக