வியாழன், 1 ஆகஸ்ட், 2013
மொழி வாழ்த்து
தேனினும் இனியது எம்மொழியே -உயர்
வானினும் உயர்ந்தது எம்மொழியே -கடல்
வீசிடும் அலையென எம்மொழியே
ஓயா தொலித்திடும் செம்மொழியே
கூடல் நகரில் தமிழ்ச்சங்கம் கூடி வளர்த்தது எம்மொழியே
கேடர் மொழிகள் உட்புகுத்தும் கேடு தகர்த்தது எம்மொழியே
வாழிய வாழிய எம்மொழியே வாளினும் கூரிய செம்மொழியே
வாழிய வாழிய எம்மொழியே வாழிய உயர்தனிச் செம்மொழியே !
சனி, 9 பிப்ரவரி, 2013
நான் காற்று
ஓடிக்கொண்டே இருப்பேன்
ஒரு இடமும் நிரந்தரமில்லை
எல்லோரும் சுவாசிக்கலாம்
யாருக்கும் சொந்தமில்லை
நான் காற்று
தமிழ்வாழ்த்து
தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது
மண்ணோடு போகும்வரை
தமிழோடு வாழ்கவென்றும் !
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும் !!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)