காக்கைச் சிறகிற்கும்
கவிதை நிறம் தீட்டியவன்
காற்று வெளியிடையில்
காதல் ரசம் பூசியவன்
சாதிச் செருக்கின்
முகத்தில் கரி பூசியவன்
நீதி உயர்ந்த மதிப்
பேரொளி வீசியவன்
அச்சத்தை துச்சமென
தூசியென ஏசியவன்
உச்சத்தில் தமிழ்மொழியை
ஏற்றி வைத்துப் பேசியவன்
விடுதலையை உயிர் மூச்சாய்
பெருங்குரலில் பாடியவன்
கொடும்வறுமை பெரும்பேயை
கடுஞ்சொல்லில் சாடியவன்
ஆங்கொரு காட்டின்
அக்கினிக்குஞ்சு - அவன்
மானுடம் காக்கத்
துடித்தவோர் நெஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக