Powered By Blogger

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார்



காக்கைச் சிறகிற்கும் 
கவிதை நிறம் தீட்டியவன்

காற்று வெளியிடையில்
காதல் ரசம் பூசியவன்

சாதிச் செருக்கின்
முகத்தில் கரி பூசியவன்

நீதி உயர்ந்த மதிப்
பேரொளி வீசியவன்

அச்சத்தை துச்சமென
தூசியென ஏசியவன்

உச்சத்தில் தமிழ்மொழியை
ஏற்றி வைத்துப் பேசியவன்

விடுதலையை உயிர் மூச்சாய் 
பெருங்குரலில் பாடியவன்

கொடும்வறுமை பெரும்பேயை
கடுஞ்சொல்லில் சாடியவன்

ஆங்கொரு காட்டின் 
அக்கினிக்குஞ்சு - அவன்

மானுடம் காக்கத்
துடித்தவோர் நெஞ்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக