நம்பிக்கை என்பதை நாட்களில் எழுது நாளும் முயற்சியை இறையென தொழுது. ஏங்கிக் தவிக்குமோ இருவிழி அழுது என்றும் உழைப்பென இயங்கிடும் பொழுது. இன்னல்கள் ஆகும் இயந்திரப் பழுது உள்ளத்தின் உறுதியே வெற்றியின் விழுது.
பெரிய ஏரி அருகே சிறிய ஊர் என்பது மாறி பெரிய ஊரில் சிறிய ஏரி என்றாகி விட்ட பின்னும் சில கெண்டை மீன்கள் துள்ளி கொண்டு தான் இருக்கின்றன வற்றும் நீரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்